தேசிய செய்திகள்

ராணுவம் தயாராக இருக்கிறபோது ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ஏன் தாமதிக்க வேண்டும்? - அஜ்மீர் தர்கா தலைவர் கேள்வி

ராணுவம் தயாராக இருக்கிறபோது ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ஏன் தாமதிக்க வேண்டும் என அஜ்மீர் தர்கா தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினத்தந்தி

அஜ்மீர்,

நாடாளுமன்றம் விரும்பினால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவம் தயாராக இருப்பதாக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறியுள்ளார். இதை வரவேற்றுள்ள அஜ்மீர் தர்கா தலைவர் ஜைனுல் ஆப்தீன் அலி கான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவத்துக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவம் தயாராக இருக்கிறபோது, ஏன் தாமதிக்க வேண்டும்? இதற்காக ராணுவத்துக்கு நாடாளுமன்றம் உத்தரவிட வேண்டும். பாகிஸ்தான் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து அகண்ட காஷ்மீர் கனவை நனவாக்குவதற்கு இதுவே தகுந்த நேரம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு