தேசிய செய்திகள்

மது குடிப்பதை கண்டித்த மனைவி ஆற்றில் தள்ளி கொலை

மது குடிப்பதை கண்டித்த மனைவியை, அவரது கணவர் ஆற்றில் தள்ளி கொலை செய்தார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் கடவலி கிராமத்தை சேர்ந்தவர் தசரத் வாகே (வயது 45). இவரது மனைவி சுரேகா (42). தசரத் வாகேவுக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் அவர் வழக்கம் போல மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

இதைப் பார்த்து கோபம் அடைந்த சுரேகா அவரை கண்டித்தார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு உண்டானது.

இதில், கடும் ஆத்திரம் அடைந்த தசரத் வாகே வீட்டருகே ஓடும் பட்சா ஆற்றில் சுரேகாவை பிடித்து தள்ளிவிட்டார்.

இதில், அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் சுரேகாவை தேடினர்.

வெகு நேரத்துக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தசரத் வாகேவை கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்