கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

அசாம்: தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டு யானை

அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டு யானை நேற்று இரவு இறந்து கிடந்தது.

தினத்தந்தி

சோனித்பூர்,

அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டு யானை நேற்று இரவு இறந்து கிடந்தது.

சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள பலிபாரா அருகே உள்ள அடபரி தேயிலை தோட்ட ஊழியர்கள் இறந்து கிடந்த யானையை பார்த்ததும், உடனடியாக உள்ளூர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தேயிலை தோட்டத்தின் வரிசை எண் 23-ல் யானை இறந்து கிடப்பதை கண்டனர்.

இதுகுறித்து அமரிபாரி சென்ட்ரல் துணை ரேஞ்சர் அனில் போர்தாகூர் கூறும்போது, "இந்த சம்பவம் குறித்து நாங்கள் உயர் அதிகாரி மற்றும் கால்நடை மருத்துவருக்கு தெரிவித்துள்ளோம். காட்டு யானையின் இறப்புக்கான சரியான காரணம் கண்டறியப்படும்" என்று கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்