புதுடெல்லி,
வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற புதிய இந்தியா நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: பயங்கரவாதம், நக்சலிசம், கஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
இந்த பிரச்சினைகள் குறித்து அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. ஆனால், உங்களுக்கு நான் ஒரு உறுதி அளிக்கிறேன். அது என்னவெனில், 2022-க்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். புதிய இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, 2022 ஆம் ஆண்டுக்குள் இந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.