தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் மேலும் 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது மராட்டிய மாநிலம்தான். அங்கு தற்போது வரை கொரோனா வைரசால் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மும்பை நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியும் பாதிக்கப்பட்டுள்ளது.

தாராவியில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தாராவியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. தாராவியில் கொரோனா பாதிப்பால் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் மராட்டியத்தில் மேலும் 466 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,666 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு 232 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 572 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்