தேசிய செய்திகள்

கால்கள் கட்டப்பட்ட நிலையில் குளத்தில் மிதந்த பெண்ணின் உடல் - போலீசார் விசாரணை

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள குளத்தில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மிதந்தது.

தினத்தந்தி

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள குளத்தில் வெள்ளிக்கிழமை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மிதந்ததாக போலீசார் தெரிவித்தனர். தோல்பூர்-ஜெய்பூர் நெடுஞ்சாலையில் உள்ள குளத்தில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பசாய் டாங் காவல் நிலைய பொறுப்பாளர் மோகன் சிங் தெரிவித்தார்.

முதல்கட்ட விசாரணையில், அந்த பெண் கொலை செய்யப்பட்டு, சடலத்தை குளத்தில் வீசியதாக தெரிகிறது. அந்த பெண்ணின் கால்கள் கட்டப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த பெண்ணை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை