தேசிய செய்திகள்

சபரிமலையில் பெண்கள் அனுமதி: மகளிர் ஆணைய தலைவி வரவேற்பு

சபரிமலையில் பெண்கள் அனுமதியளித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு மகளிர் ஆணைய தலைவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா கூறும்போது, அரசியல்சாசனம் அனைவருக்கும் சமஉரிமை கொடுத்துள்ளது. ஆனால் மதரீதியான இடங்களில் காட்டப்படும் பாகுபாடு அதற்கு தடையை ஏற்படுத்துகிறது. ஒருபுறம் நாம் மாதவிடாய் என்பது உயிரியல் காரணி என்று சொல்கிறோம். மற்றொருபுறம் இந்த சமயத்தில் பெண்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று சொல்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு முற்றிலும் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது என்றார்.

டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்கள் அனைத்துவிதத்திலும் ஆண்களுக்கு சமம். பெண்களும் கோவில், மசூதி, தேவாலயம், குருத்வாரா என அனைத்து மதவழிபாட்டு தலங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இதை நடைமுறைக்கு கொண்டுவந்த சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்