தேசிய செய்திகள்

டோர்னியர் விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 3 பெண் விமானிகள்

டோர்னியர் விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, இந்திய கடற்படையில் முதல் முறையாக 3 பெண் விமானிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

தினத்தந்தி

கொச்சி

டோர்னியர் விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, இந்திய கடற்படையில் முதல் முறையாக 3 பெண் விமானிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

கொச்சியில் தெற்கு கடற்படை கட்டளை (எஸ்.என்.சி) மூலம் டோர்னியர் விமானத்தின் விமானிகளாக அமர்த்தபட்டு உள்ளனர்.

கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் சிவாங்கி, சுபாங்கி ஸ்வரூஒமற்றும் திவ்யா சர்மா ஆகியோர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவிற்கு டோர்னியர் விமானங்களை இயக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

சிவாங்கி பீகாரை சேர்ந்தவர், சுபாங்கி ஸ்வரூப் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் திவ்யா சர்மா டெல்லியை சேர்ந்தவர் ஆவார்கள்.

ஐ.என்.எஸ் கருடாவில் நேற்று நடைபெற்ற விழாவில் 6 பேருக்கு பட்டம் வ்ழங்கப்பட்டது இதில் இந்த 3 பெண் விமானிகளும் அடங்குவர்.

9 மாத பயிற்சிகளுக்குப் பிறகு டோர்னியர் விமானத்தில், அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்கள் விரைவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்