தேசிய செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 5-ந்தேதி தொழிலாளர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 5-ந்தேதி தொழிலாளர்கள் போராட்டம் மேற்கொள்கின்றனர். இதில் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் வருகிற 5-ந்தேதி அகில இந்திய அளவில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு. மற்றும் அகில இந்திய கிசான் சபா ஆகிய 3 அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகின்றன. இந்த போராட்டம் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும், பத்திரிகையாளர் சந்திப்பும் டெல்லியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை