தேசிய செய்திகள்

திருவனந்தபுரம் வந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு

திருவனந்தபுரம் வந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கறுப்புக்கொடி காட்டி இளைஞர் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் வழிபடுவதற்காக நேற்று இரவு பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வருகை தந்தார். விமான நிலையத்தில், எடியூரப்பாவுக்கு கேரள இளைஞர் காங்கிரசார் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற வன்முறை தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர்கள் 7 பேர் அம்மாநில போலீசாரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எடியூரப்பாவுக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கறுப்புக்கொடி காட்டிய காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து