தேசிய செய்திகள்

முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பாவே நீடிப்பார்: கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி

துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தினத்தந்தி

பா.ஜனதா மேலிடம் விரும்பினால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார். அவர் ஏன் இவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை. எடியூரப்பாவே எங்கள் தலைவர். தான் அந்த பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை என்று அவர் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கூறியுள்ளார். முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பாவே நீடிப்பார். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். தொண்டர்கள் அடிப்படையில் இயங்கும் கட்சி பா.ஜனதா. கட்சியே முக்கியம் என்று எடியூரப்பா கூறியுள்ளார். எங்கள் கட்சியில் சில தலைவர்களை எடியூரப்பா உருவாக்கியுள்ளார். அதனால், தான் கட்சியில் மாற்று தலைவர்கள் இருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை