புதுடெல்லி,
நிதிநெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை மத்திய ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 3-ம் தேதி வரை ரூ.50,000 மட்டுமே யெஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியும் என்று கெடுபிடி விதித்துள்ளது.
இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது ; - நோ யெஸ் பேங்க். மோடி மற்றும் அவரது யோசனைகள் அனைத்தும் இந்தியப் பொருளாதாரத்தை அழித்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.