தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் கற்பழிப்பு : 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

உத்தரபிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முசாபர் நகர்,

உத்தரபிரதேச மாநிலம் புதானாவில் உள்ள பஸ் நிலையத்தில் சம்பவத்தன்று 24 வயதான இளம்பெண் ஒருவர், தன்னுடைய சொந்த கிராமத்திற்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், லிப்ட் கொடுப்பதாக கூறி அந்த இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் ஒரு காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு அந்த இளம்பெண்ணை 3 பேரும் மாறி மாறி கற்பழித்தனர்.

இதுகுறித்து அந்த இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கற்பழிப்பில் ஈடுபட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...