பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத் தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கடந்த 28-ந்தேதி பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஜனாதிபதி உரையாற்றினார். மறுநாள், 29-ந்தேதி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.இதனால், பாராளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-2027-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்த 9-வது பட்ஜெட் இதுவாகும்.இந்த பட்ஜெட்டில் பல்வேறு வரி சலுகைகள் வழங்கப்பட்டாலும், தனி நபர் வருமான வரி விகிதம் மற்றும் உச்ச வரம்பில் எந்த வித மாற்றமும் இல்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு சில பொருட்களின் விலை குறைவாகவும் அல்லது உயர்வாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. விவரங்கள் பின்வருமாறு:
சிகரெட்டுகள்
பீடிகள், பான் மசாலா, குட்கா
மதுபானங்கள், வெளிநாட்டு மதுபானங்கள்
நிலக்கரி, பழைய இரும்பு
வருமான வரி அபராதங்கள்
கணக்கில் காட்டாத அசையும் சொத்துகள்
இறக்குமதியாகும் தொலைக்காட்சி, கேமராக்கள்
ஆடம்பர கை கடிகாரங்கள்
தோல், காலணி பொருட்கள்
புற்றுநோய் மருந்துகள்
வெளிநாட்டு கல்வி தொடர்பான செலவுகள்
லித்தியம் அயன் பேட்டரி
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பான செலவுகள்
மைக்ரோவேவ் ஓவன்
வீடியோ கேம்ஸ்களுக்கான உதிரி பாகங்கள்
பீடி இலைகள்