செய்திகள்

பா.ஜனதா கூட்டணியில் ரங்கசாமி உள்ளாரா? பிரதமர் மோடியின் படம் இல்லாமல் யாருக்காக ஓட்டு கேட்கிறார்கள்? நாராயணசாமி கேள்வி

பிரதமர் மோடியின் படம் இல்லாமல் என்.ஆர்.காங்கிரசார் யாருக்காக ஓட்டு கேட்கிறார்கள்? பாரதீய ஜனதா கூட்டணியில்தான் ரங்கசாமி உள்ளாரா? என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி

அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை பிரித்துத்தர சுதந்திரமான அமைப்பான திட்ட கமிஷனை பிரதமராக இருந்த நேரு உருவாக்கினார். அதை கலைத்து நிதி ஆயோக்கை உருவாக்கி மாநிலங்களுக்கு நிதி வேண்டும் என்றால் பிரதமரை அணுகவேண்டும் என்ற நிலையை உருவாக்கி அதிகாரத்தை பிரதமர் மோடி தன்னிடம் கொண்டுவந்துவிட்டார்.