செய்திகள்

கடல் சீற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை; அழிக்காலில் ரூ.9¼ கோடியில் தூண்டில் வளைவு அமைக்க அனுமதி

கடல் சீற்றத்தை கட்டுப் படுத்த அழிக்காலில் ரூ.9¼ கோடியில் தூண்டில் வளைவு அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்து ள்ளது. இதற்காக தளவாய்சுந்த ரத்தை சந்தித்து மீனவ பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் ராஜாக் கமங்கலம் ஒன்றியத் துக்கு உட்பட்ட அழிக்கால் பகுதியில் அவ்வப்போது கடல் சீற்றம் ஏற்படுவது வழக்கம். அந்த பகுதியில் உள்ள மீனவ மக்களின் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்து விடும்.

இதனால் மீனவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். மேலும், வீடுகளில் தேங்கி கிடந்த மணலை அப்புறப்படுத்திய பிறகு மீண்டும் மீனவர்கள் அந்த வீடுகளுக்கு சென்று தங்குவார்கள். இத்தகைய சிரமத்தை அழிக்கால் பகுதி மீனவர்கள் அனுபவித்து வந்தனர்.