செய்திகள்

ஆப்கானிஸ்தானில் போலீஸ் வேனை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல்; ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணம், நவாபராக் ஜாயி மாவட்டத்தில் போலீஸ் வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்காக சாலையில் கண்ணிவெடிகளை பயங்கரவாதிகள் புதைத்து வைத்துள்ளனர்.

தினத்தந்தி

காபூல்,

கண்ணிவெடிகள் புதைத்து வைத்துள்ள சாலையில் போலீசார் நேற்று வேனில் சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் அதைக்கண்டு, தொலைவில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் முறையில் கண்ணிவெடிகளை வெடிக்க வைத்தனர்.

அதில் போலீஸ் வேன் சிக்கி உருக்குலைந்து போனது. அந்த வேனில் பயணம் செய்த ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து படுகாயம் அடைந்த போலீசாரை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கண்ணி வெடி தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி, எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்