செய்திகள்

மீஞ்சூர் அருகே 2 அரசு பஸ்கள் சிறைபிடிப்பு

மீஞ்சூர் அருகே 2 அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டன.

தினத்தந்தி

மீஞ்சூர்,

பொன்னேரியில் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் இருந்து தத்தைமஞ்சி கிராமத்தின் வழியாக அரசு பஸ்கள் இயக்கப் படுகிறது. இந்த அரசு பஸ்கள் மூலம் திருவெள்ளைவாயல், காட்டூர், தத்தைமஞ்சி, கடப்பாக்கம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் தினந்தோறும் பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக அரசு பஸ்கள் சரியாக இயக்கப்படுவதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு பணிமனைக்கு புகார் செய்தும் எந்தவித பயனும் இல்லை.

இதனையடுத்து தத்தைமஞ்சி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திடீரென நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 2 அரசு பஸ்களை சிறைபிடித்தனர். தகவலறிந்த காட்டூர் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்