செய்திகள்

படப்பை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

படப்பை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள கருணாகரச்சேரி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானவேல், (வயது 55) விவசாயி. இவர் சென்னையில் வசித்து வரும் ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான கருணாகரச்சேரியில் உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வயலுக்கு சென்று கால்வாயை தாண்டும் போது ஏற்கனவே மின்கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார்.

இதில் மின்சாரம் தாக்கி ஞானவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்து போலீசார் விசாரணை செய்து ஞானவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு