செய்திகள்

ஒடிசாவில் கடும் வெள்ளம்: 3 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன; ரெயில் சேவை பாதிப்பு

ஒடிசாவில் கடும் வெள்ளத்தில் சிக்கி சரக்கு ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

ராயகடா,

ஒடிசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனிடையே, ஒடிசாவின் ராயகடா மற்றும் தித்லகார் பகுதிகளுக்கு இடையே அம்போடலா ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயிலின் 3 பெட்டிகள் இன்று தடம் புரண்டன. தண்டவாளத்தினை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து விபத்து நிவாரண ரெயில் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ராயகடா மற்றும் தித்லகார் வழித்தடத்தின் தைகாலு மற்றும் அம்பதோலா பிரிவில் கடும் வெள்ளம் ஏற்பட கூடிய சூழலில் 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 5 ரெயில்கள் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டு உள்ளன.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு