செய்திகள்

சாங்கிலியில், மழை வெள்ளத்தின் போது மீட்பு: படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 5 பேர் பிணமாக மீட்பு-பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

சாங்கிலியில் மீட்பு படகு கவிழ்ந்த விபத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் மேலும் 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

தினத்தந்தி

புனே,

சாங்கிலியில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக கிருஷ்ணா ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் கடந்த வியாழக்கிழமை பாலுஸ் தாலுகாவில் உள்ள பிரா மனால் கிராமத்தை சூழ்ந்தது.

இதையடுத்து, அங்கு சிக்கி தவித்த மக்கள் படகுகளில் மீட்கப்பட்டு வந்தனர். மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான ஒரு படகில் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் ஏறியிருந்தனர்.

அப்போது திடீரென படகு கவிழ்ந்தது. இதில், படகில் இருந்தவர்கள் தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்தனர். அவர்களில் சுமார் 15 பேர் நீந்தி உயிர்பிழைத்தனர். அன்றைய தினம் 9 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

காணாமல் போனவர்களை பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக தேடினர். இதில் அடுத்தடுத்து இரு நாட்களில் 3 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இதன் காரணமாக சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில், படகு கவிழ்ந்து வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்டவர்களில் மேலும் 5 பேர் நேற்று பிணமாக மீட்கப்பட்டனர். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்து உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு