செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் தக்க பதிலடி

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா, கதுவா மாவட்டங்களில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக துப்பாக்கிகள், தானியங்கி இயந்திரங்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

நீண்ட தூரம் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஆயுதங்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதால், எல்லையோர கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில், எல்லையோர கிராமங்களில் உள்ள 10 வீடுகள் லேசான சேதம் அடைந்தன. பொதுமக்கள் இருவர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு