செய்திகள்

பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளி, மயங்கி விழுந்து சாவு

நெய்வேலி அருகே பா.ம.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தினத்தந்தி

நெய்வேலி,

நெய்வேலி அருகே உள்ள காட்டுவேகாக்கொல்லையை சேர்ந்தவர் விஜயரங்கன்(வயது 43), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இந்திராநகரில் நடைபெற்ற பா.ம.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது திடீரென விஜயரங்கன் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், விஜயரங்கன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்