செய்திகள்

முகக்கவசத்தை அதிக விலைக்கு விற்கக்கூடாது என வேண்டுகோள்

முகக்கவசத்தை அதிக விலைக்கு விற்கக்கூடாது என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முகக்கவசம் அணிவதுடன், கிருமிநாசினிகளை பயன்படுத்தி கைகளையும், உடல் பாகங்களையும் சுத்தம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதனால் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி மருத்துவ பொருட்களுக்கு மார்க்கெட்டில் பெருமளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவைகளை பதுக்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்(என்.பி.பி.ஏ) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முகக்கவசம் மற்றும் இதற்கு பயன்படும் மருந்து பொருட்களை அதிகபட்ச சில்லரை விலைக்குமேல் விற்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள் (சுகாதாரம்) மற்றும் மாநில மருந்துக்கட்டுப்பாட்டாளர்களுக்கு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்கும் விதத்தில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்