செய்திகள்

15வது நிதிக்குழு பரிந்துரையின்படி கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.15,187 கோடி ஒதுக்கீடு

15வது நிதிக்குழு பரிந்துரையின்படி கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15 ஆயிரத்து 187 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 15வது நிதிக்குழு பரிந்துரையின்படி 28 மாநிலங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15 ஆயிரத்து 187 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிதியானது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மீட்பு ஆகிய பணிகளில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிக உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி தமிழகத்திற்கு ரூ.901.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை