சிறப்புக் கட்டுரைகள்

சாம்சங் கேலக்ஸி புக் புரோ

சாம்சங் நிறுவனம் இரண்டு புதிய மாடல் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

கேலக்ஸி சீரிஸில் வந்துள்ள இந்த மாடல்கள் கேலக்ஸி புக் புரோ மற்றும் கேலக்ஸி புக் புரோ 360 என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இது 13.6 அங்குல திரை மற்றும் 15.6 அங்குல அமோலெட் திரைகளைக் கொண்டதாக வந்துள்ளது. மிகவும் மெல்லியதாகவும், எடை குறைவானதாகவும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் 11-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 7 சி.பி.யு. பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 16 ஜி.பி. ரேம், 1 டி.பி. நினைவகம் உள்ளது.

இந்நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே தொழில்நுட்பம் லேப்டாப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள கலர் என்ஜின் தொழில்நுட்பம், திரையில் தெரியும் காட்சிகளின் தன்மைக்கேற்ற வண்ணங்களை தன்னிச்சையாக வழங்கும். வீடியோ அழைப்புகளின் போது காட்சிகளுடன் மறுமுனையில் பேசுபவரது ஒலி, உரையாடல் துல்லியமாக கேட்கும் வகையில் இதில் சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஸ்மார்ட் திங்ஸ் செயலி உள்ளது. எளிதாக புளூடூத் இணைப்பைப் பெறும் வசதி கொண்டது. இதில் மேம்படுத்தப்பட்ட எஸ் பேனா வசதி உள்ளது. மேலும் கிளிப் ஸ்டூடியோ பெயிண்ட் சாப்ட்வேர் இந்த லேப்டாப்போடு வழங்கப்படுகிறது. நீலம் மற்றும் சில்வர் நிறங்களில் வந்துள்ளது. 13 அங்குல மாடல் விலை சுமார் ரூ.74,510. மற்றொரு மாடலான 15 அங்குல லேப்டாப் விலை சுமார் ரூ.81,961.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்