சிறப்புக் கட்டுரைகள்

சாம்சங் கேலக்ஸி இஸட் மடக்கும் வகை ஸ்மார்ட்போன்

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் மடக்கும் வகையிலான புதிய தலைமுறை ஸ்மார்ட்போனை இஸட் சீரிஸில் அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பிரிவில் இது மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த மாடலாகும். மிக அழகிய வடிவமைப்புடன், அதிநவீன செயல் பாடுகளைக் கொண்டதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இது 7.6 அங்குல திரையைக் கொண்டது.

தினத்தந்தி

மடக்கும் வசதி கொண்ட இந்த மாடலில் ஸ்டைலஸ் பேனா பயன்படுத்த முடியும். இத்தகைய வசதி கொண்ட முதலாவது மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சுமார் 2 லட்சம் முறை மடக்கி சோதிக்கப் பட்டது. அப்போதும் இதன் செயல்பாட்டில் எவ்வித பிரச் சினையும் ஏற்படவில்லை என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடியோ அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் வகையில் மேல் பகுதியில் ஒரு திரை உள்ளது. இதன் மேல் பகுதி ஆர்மர் அலுமினியத்தால் ஆனது. கேலக்ஸி ஸ்மார்ட்போன் சீரிஸில் இத்தகைய உறுதியான அலுமினிய மேல்பாகம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை யாகும். நீர் புகா தன்மை கொண்டது. இதன் திரையில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.இது கீறல் விழுவதைத் தடுக்கும். கை தவறி கீழே விழுந்தாலும் உடையாத உறுதித் தன்மை கொண்டது. மேலும் திரையில் நெகிழ்வு தன்மை கொண்ட பி.இ.டி. பிலிம் உள்ளது. இது காட்சிகள் தெளிவாக தெரிய உதவுகிறது. மேலும் போனை மடக்கி மீண்டும் பயன்படுத்த உதவு கிறது.

கருப்பு, பச்சை, சில்வர் நிறங்களில் இது வந்துள்ளது. இதில் டால்பி அட்மோஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளது. மைக்ரோசாப்ட் அவுட்லுக் ஆபீஸ் இயங்குதளம் கொண்டது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைப் போல இதைப் பயன்படுத்தலாம்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்