ஒரு தரப்பினர், திருமணம் செய்து கொள்ளாமல் தனிமை வாழ்க்கையை விரும்பி தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். மற்றொரு தரப்பினர் விதி வசத்தால் தனிமையில் வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
தனிமையில் வசிக்கும் பெண்கள் தங்கள் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்வார்கள்? அவர்களால் எப்படி தனிமையில் நிம்மதியாக வாழ முடியும்? தனிமை அவர்களுக்குள் வெறுமையை ஏற்படுத்துமா? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் எழும். அவர்கள் மீது பலரது பரிதாப பார்வையும் விழும். உண்மையில், தனிமையில் வாழ்பவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் அல்ல. அவர்களும் மற்றவர்களை போல் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுள் ஒரு சிலரை சந்திக்கலாம்.