தமிழக செய்திகள்

மதுரையில் குப்பை லாரியின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு - ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

Gokul Raj B

மதுரை,

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த மாநகராட்சி குப்பை லாரியின் பின்பக்க சக்கரம் திடீரென கழன்று ஓடியுள்ளது. இதனால் லாரி நிலை தடுமாறி ஒரு பக்கமாக சாயத்தொடங்கியது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரம் என்பதால், லாரி கவிழ்ந்து விபத்து ஏற்படும் சூழல் உருவானது.

இருப்பினும் நிலைமையை உணர்ந்து கொண்ட லாரி ஓட்டுநர், நிதானமாக செயல்பட்டு லாரியை மேம்பாலத்தின் ஓரத்தில் நிறுத்தினார். ஓட்டுநரின் சாமர்த்தியமான செயலால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே நேரத்தில் மேம்பாலத்தில் நின்ற குப்பை லாரியினால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்