தமிழக செய்திகள்

1 கிலோ வெறும் 2 ரூபாய்... வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

நெல்லையில், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி பகுதிகளில் விளையும் காய்கறிகளை, பணகுடி அருகே காவல்கிணறு சந்தைக்கு கெண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். கேரளாவில் ஓணம் பண்டிகை நிறைவு மற்றும் வரத்து அதிகரிப்பு காரணமாக காய்கறிகளின் விலை சரிந்துள்ளது.

15 முதல் 30 ரூபாய்க்கு விற்பனையான வெண்டைக்காய், வெள்ளரிக்காய், புடலங்காய் ஆகியவை தற்பேது கிலோவுக்கு 2 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அத்துடன், காய்கறிகள் கால்நடைகளுக்கு உணவாக மாறியுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு