ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் கறம்பக்குடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு அழகன்விடுதி பறையன் குளத்தின் அருகே மேட்டுப்பட்டி ஓடியனேரி காலனியை சேர்ந்த ராஜ்குமார் மகன் சிவகுமார் (வயது 23) என்பவர் சாராயம் விற்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.