தமிழக செய்திகள்

கதண்டுகள் கடித்து 10 பேர் காயம்

கதண்டுகள் கடித்து 10 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த வயலூர் கிராம பஸ் நிறுத்தம் அருகே அகரம்சீகூர்-அரியலூர் செல்லும் தார் சாலை ஓரத்தில் உள்ள ஒரு புளிய மரத்தில் கதண்டுகள் கூடுகட்டி உள்ளன. இந்த கதண்டுகள் நேற்று மதியம் திடீரென கலைந்து பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்த ஜலாவுதின், மாதசாகிப், இளவரசு, கந்தசாமி, செல்லக்கண்ணு உள்பட 10 பேரை கடித்தன. இதில் காயம் அடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம், திட்டக்குடி அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கதண்டுகளை அழிக்க தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்