தமிழக செய்திகள்

அம்மன் சிலையில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலி திருட்டு

சென்னை வியாசர்பாடியில் அம்மன் சிலையில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலியை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனியில் உள்ள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் சிலையின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலியை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுபற்றி கோவில் நிர்வாகியான ராஜம்மாள் அளித்த புகாரின்பேரில் எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற விக்கி (வயது 23) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து அம்மன் சிலையில் இருந்து திருடிய 10 பவுன் தாலி சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை