தமிழக செய்திகள்

ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை - செசன்சு கோர்ட்டு தீர்ப்பு

சென்னையில் ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தினத்தந்தி

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. ஆட்டோ டிரைவரான இவருக்கும், மற்றொரு ஆட்டோ டிரைவர் கருணாநிதி என்பவருக்கும் சவாரி ஏற்றுவதில் கடந்த 2010-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதில் செல்வக்குமாரை கருணாநிதி கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர். இந்த வழக்கை சென்னை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்தார். அரசு தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வக்கீல் டி.சுரேஷ் ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் கருணாநிதிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு