தமிழக செய்திகள்

வார இறுதி நாள்: சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கம்- எஸ்.இ.டி.சி அறிவிப்பு

பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தினத்தந்தி

சென்னை,

வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் 2 நாட்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன், கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. அதன்படி இந்த 2 நாட்களும் மொத்தம் 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (19-ஆம் தேதி) 355 சிறப்பு பஸ்களும், வருகிற 20-ஆம் தேதி 350 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 55 சிறப்பு பஸ்களும், வருகிற 20-ஆம் தேதி 55 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வருகிற 21-ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. வருகிற 21-ஆம் தேதி மகாளய அமாவாசை ஆகும்.

அன்று ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பது வழக்கம். இதையொட்டி வருகிற 20-ஆம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மறுநாள் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த தகவலை அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி) வெளியிட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து