தமிழக செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

கரூர் மாவட்டம், துளசிகொடும்பில் கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 10-ம் அரசு பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும்.

மாணவி வித்யபாரதி 500-க்கு 489 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி பவித்ரா 487 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், மாணவிகள் ஜெயஸ்ரீ, பிரகதி, சுவாதி ஆகிய 3 மாணவிகள், விஷ்ணுவர்த்தன் என்ற மாணவனும் 485 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பெற்றுள்ளனர். கணிதத்தில் 6 பேரும், அறிவியலில் 9 பேரும் என மொத்தம் 15 பேர் 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று பெருமை சேர்த்த மாணவ- மாணவிகளை பள்ளியின் தலைவர் கனகராஜ், செயலாளர் ஜெயபிரகாசம், பொருளாளர் முத்துசாமி, தாளாளர் பெரியசாமி, பள்ளியின் தலைமையாசிரியர் பத்மநாபன், அறக்கட்டளை நிர்வாகிகள், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்