தமிழக செய்திகள்

தேர்வில் தோல்வி பயத்தில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

சென்னை கொரட்டூரில் தேர்வில் தோல்வி பயத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

சென்னை கொரட்டூர் திருமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்குமார். இவருடைய மனைவி திலகவதி. இவர்களுக்கு சவேதா (17), சவித்ரா (15) என 2 மகள்களும், ஜஸ்வந்தன் (14) என்ற மகனும் உள்ளனர். இதில் சவித்ரா, தனியார் பள்ளியில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ளார். தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

இந்தநிலையில் தான் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற பயத்தில் இருந்து வந்த சவித்ரா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்