தமிழக செய்திகள்

கே.கே.நகர் குடியிருப்பு பகுதியில் 12 நவீன கண்காணிப்பு கேமராக்கள்

கே.கே.நகர் குடியிருப்பு பகுதியில் 12 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்தன.

தினத்தந்தி

திருச்சி கே.கே.நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரிவேராநகர் குடியிருப்பு பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 12 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த கேமராக்களின் பயன்பாட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கே.கே.நகர் போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு, 12 நவீன கேமராக்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். மேலும், குடியிருப்பு பகுதி மக்களிடையே குற்ற விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்தும், கண்காணிப்பு கேமரா பயன்பாடு குறித்தும் பேசினார். நிகழ்ச்சியில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், குடியிருப்பு பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து