தமிழக செய்திகள்

கோவையில் 133 கிலோ குட்கா பறிமுதல்

கோவையில் 133 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தினத்தந்தி

கோவை,

கோவை மாவட்டத்தில் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சந்தேக இடங்களில் சோதனையும் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, கிணத்துக்கடவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அரசம்பாளையம் பிரிவு, காமராஜ் நகரில் உள்ள வீடு ஒன்றில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில், வீட்டுக்குள் பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்ய அடுக்கி வைக்கப்பட்டிருந்த, 20 மூட்டைகளில் இருந்த 133 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, சொலவம்பாளையத்தை சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளர் சங்கர் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டார். எங்கிருந்து குட்கா வாங்கப்பட்டது. எந்தெந்த கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையாளர் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்