தமிழக செய்திகள்

லாரியிலிருந்து காருக்கு ஏற்றியபோது சிக்கிய 150 கிலோ குட்கா - விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

திருவள்ளூர் அருகே குட்கா கடத்தி வந்த வாகனத்தை சோதனை செய்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் சத்திரம் பகுதியில் கன்டெய்னர் லாரியில் இருந்த பொருட்களை காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், வாகனத்தை சோதனை செய்தபோது, ஒன்றரை லட்சம் மதிப்பிலான 150 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து கன்டெய்னர் லாரியில் குட்கா பொருட்களை கடத்தி வந்து, பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனைக்கு பயன்படுத்த இருந்ததும் தெரியவந்தது. போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக காரின் முன்பக்கம், பின்பக்கத்தில் பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து குட்கா பொருட்களை கடத்தி வந்து, போலீசாருக்கு கொலைமிரட்டல் விடுத்த நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும், கன்டெய்னர் லாரி, காரையும் பறிமுதல் செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்