தமிழக செய்திகள்

திருநின்றவூரில் மினிவேனில் ரூ.1.92 லட்சம் பணம் திருட்டு

திருநின்றவூரில் மினிவேனில் ரூ.1.92 லட்சம் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

ஆவடி காமராஜர்நகர் பிரதான சாலையில் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மினிவேன் டிரைவராக ராமலிங்கம் (வயது 27) மற்றும் லோடுமேன்கள் குமார் (28), ஆனந்த் (வயது 45) ஆகிய 3 பேரும் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ராமலிங்கம் மினிவேனில் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருநின்றவூர் சென்றார். அவருடன் லோடு மேன்கள் குமார், ஆனந்த் ஆகிய இருவரும் சென்றனர். பின்னர் திருநின்றவூர்-பெரியபாளையம் சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வினியோகம் செய்து விட்டு பணத்தை வாங்கிக்கொண்டு வாகனத்தில் உள்ளே வைத்த நிலையில், ஏற்கனவே வைத்திருந்த ரூ.1.92 லட்சத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி