தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மீன்பிடி துறைமுகம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக, ஜார்ஜ் ரோட்டை சேர்ந்த செல்லையா மகன் பாலமுருகன் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோன்று தூத்துக்குடி காமராஜர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த கருப்பசாமி மகன் நாகமலை (20) என்பவரை தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்