தமிழக செய்திகள்

தூத்துக்குடி: கொலை, பாலியல் தொல்லை வழக்குகளில் 2 பேர் குண்டாசில் கைது

தூத்துக்குடியில் கொலை, பாலியல் தொல்லை வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் ஏசய்யா மகன் சுரேஷ் (வயது 47). இவர் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் சுரேசை கடம்பூர் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் நடந்த கொலையில் முள்ளக்காடு பகுதியை சேர்ந்த ஜார்ஜ் மகன் சுரேஷ் (வயது 44) கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கொலை, பாலியல் தொல்லை ஆகிய 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பரிந்துரை அளித்தார். அந்த பரிந்துரைப்படி, இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். உத்தரவையடுத்து இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு