தமிழக செய்திகள்

2 பேர் பரிதாப சாவு

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தினத்தந்தி

மொரப்பூர்:-

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

கம்பைநல்லூர் அருகே நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே சவூலூர் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் மகன் சின்னச்சாமி (வயது 60). இவர் நேற்று முன்தினம் சவூலூரில் இருந்து கம்பைநல்லூர் நோக்கி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாலகிருஷ்ணன் (50) என்பவரும், அவருடைய உறவினர் மூக்கன் என்பவரும் இன்னொரு மோட்டார் சைக்கிளில் ஆல்ரப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தனர்.

2 பேர் சாவு

சின்னச்சாமி வந்த மோட்டார் சைக்கிளும், பாலகிருஷ்ணன் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சின்னச்சாமி, மூக்கன், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மூக்கன், சின்னச்சாமி இருவரும் பரிதாபமாக இறந்தனர். பாலகிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்