தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் காயம்

நீடாமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி நடந்த விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

நீடாமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி நடந்த விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

ரெயில்வே கேட் மீது மோதல்

தஞ்சை மேலவீதியைச் சேர்ந்தவர் ராகேஷ் (வயது22). தஞ்சை மாவட்டம் பூண்டி சாலியத்தெருவை சேர்ந்தவர் ஹரிவெங்கடேஷ் (25). இருவரும் மோட்டார்சைக்கிளில் தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சம்பவத்தன்று இரவு சென்று கொண்டிருந்தனர். அதுசமயம் நீடாமங்கலம் அருகே ஆதனூரில் ரெயிலுக்காக மூடப்பட்டிருந்த ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் ரெயில்வே கேட் மீது மோதியது. தொடர்ந்து எதிரில் மோட்டார்சைக்கிளில் நின்று கொண்டிருந்த நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் மீதும் மோட்டார்சைக்கிள் மோதியது.

சப்-இன்ஸ்பெக்டர் காயம்

இந்த விபத்தில் ராகேஷ் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளின் பின்புறம் உட்கார்ந்திருந்த ஹரிவெங்கடேஷ் கீழே விழுந்ததால் அவருக்கு தலையிலும், மோட்டார்சைக்கிள் மோதியதால் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியனுக்கு இடது முழங்கையிலும் படுகாயம் ஏற்பட்டது.

தலையில் காயம் அடைந்த ஹரிவெங்கடேஷ் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழனியன் தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்