தமிழக செய்திகள்

மோட்டார்சைக்கிள்கள் மோதலில் 2 பேர் படுகாயம்

மோட்டார்சைக்கிள்கள் மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

கண்ணமங்கலம் 

மோட்டார்சைக்கிள்கள் மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 43). இவர் நேற்று முன்தினம் இரவு வாழியூர் கூட்ரோடில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரது பின்னால் கொளத்தூரை சேர்ந்த பாலு என்பவரது மகன் ராஜா (32) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஏழுமலையின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

அவர்கள் இருவரும் மருதுதுவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏழுமலை கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்