தமிழக செய்திகள்

மொபட் திருடிய 2 பேர் சிக்கினர்

பொள்ளாச்சியில் மொபட் திருடிய 2 பேர் சிக்கினர்.

தினத்தந்தி

பொள்ளாச்சி அடுத்த ஏ.சங்கம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் அழகேஸ்வரி (வயது 30). இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது மொபட்டை, வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, மொபட் மாயமாகி இருந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அழகேஸ்வரியின் மொபட்டை திருடிய நபர்கள் கேரள மாநிலம் ஆழப்புலாவைச் சேர்ந்த அனுப் (35) மற்றும் வால்பாறை அருகே சோலையார் அணை சத்தியா காலனியைச் சேர்ந்த அவரது நண்பர் வசந்த் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, மொபட்டை பறிமுதல் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து