தமிழக செய்திகள்

மேலும் 2 பேர் கைது

பழனியில் நடந்த தொழிலாளி கொலை வழக்கில், மேலும் 2 போ கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

பழனி குரும்பபட்டியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 27). கூலித்தொழிலாளி. கடந்த 3-ந்தேதி இவர், பழனி பஸ்நிலையம் அருகே நடந்து வந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முன்விரோதத்தில் வடிவேலுவின் நண்பர்களான அழகாபுரியை சேர்ந்த சுரேஷ், பழனி அடிவாரத்தை சேர்ந்த வி.மாரிமுத்து ஆகியோர் வடிவேலுவை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பழனி அடிவாரத்தை சேர்ந்த செல்லப்பாண்டி (25), பி.மாரிமுத்து (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை