தமிழக செய்திகள்

வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது

வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை வடபழனி, மன்னார் முதலி தெருவில் இயங்கி வந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் கடந்த 16-ந்தேதி 7 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் படித்துவிட்டு வேலை இல்லாத பட்டதாரி வாலிபர்களே ஈடுபட்டது தெரிந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே கல்லூரி மாணவர்கள், பட்டதாரி வாலிபர்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த விருகம்பாக்கத்தை சேர்ந்த இஸ்மாயில் (வயது 21), பரத்வாஜ் (22) ஆகிய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது