தமிழக செய்திகள்

தம்பதியை தாக்கிய 2 பேர் கைது

அய்யலூர் அருகே தம்பதியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

அய்யலூர் அருகே உள்ள கெங்கையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது தம்பி ராஜா என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முருகன் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ராஜா மற்றும் அவரது உறவினர்கள் முருகனிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து முருகன் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகன் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வடமதுரை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ராஜா மற்றும் அவரது உறவினர்களான சரவணக்குமார், புவனேஸ்வரி, முத்துலட்சுமி உள்பட 5 பேர் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து ராஜா, சரவணக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்